Posts

புதினா , மல்லி பக்கோடா

  புதினா , மல்லி பக்கோடா     தேவையானவை :  புதினா - 1 கட்டு     மல்லித்தழை - 1 சிறிய கட்டு     கடலை மாவு -1 கப்     இஞ்சி - 1 துண்டு     பச்சை மிளகாய் -3   சோம்பு -1 டீஸ்பூன்   பெரிய வெங்கயம் - 2    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு      செய்முறை :       புதினா மல்லி தழையை சுத்தம் செய்து கொள்ளுங்கள் , வெங்காயம் ,  பச்சை மிளகாய்   பொடி   பொடியாக     நறுக்கிகொள்ளவும் .  இவற்றை     கடலை மாவுடன் பிசைந்து கொள்ளவும் , பிறகு   எண்ணெயை   காயவைத்து , மாவு கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு அல்லது உருட்டிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும் .                  

ஆப்பிள் பஜ்ஜி

Image
ஆப்பிள் பஜ்ஜி  தேவையானவை :  ஆப்பிள் -1 கடலை மாவு -1 கப்  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  ஆப்ப  சோடா- 1 சிட்டிகை  உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு   செய்முறை : ஆப்பிள் கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்கவும் பிறகு கடலை மாவுடன்  மஞ்சள் தூள் உப்பு  ஆப்ப சோடா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஓஊற்றி இட்லி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் ,  எண்ணெயை  காயவைத்து ஆப்பிள் துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுத்தால் ஆப்பிள் பஜ்ஜி தயார் .                                                                                                                                                    புதினா , மல்லி பக்கோடா    ரெசிபி                                                   

தக்காளி சாதம்

Image
    தக்காளி சாதம்     தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:  தக்காளி – நான்கு,   பெரிய வெங்காயம் – இரண்டு,   இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்,   சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்,   கடுகு – அரை டீஸ்பூன்,   உளுந்து – ஒரு டீஸ்பூன்,   கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,  சீரகம் – அரை டீஸ்பூன்,   சோம்பு – அரை டீஸ்பூன்,   பச்சை மிளகாய் – 3,   வரமிளகாய் – நான்கு,   கருவேப்பிலை – ஒரு கொத்து,   மல்லித்தழை – அரை கைப்பிடி,   புதினா இலை – அரை கைப்பிடி,   உப்பு – தேவையான அளவு,   மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன். STEP 1 : முதலில் ரெண்டு ஆழாக்கு அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு  ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வைத்து நன்கு காய்ந்ததும் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சமையல் எண்ணெயை விடுங்கள். பின்னர் கடுகு போட்டு தாளித்து உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுப்பட்டதும் சீரகம், சோம்பு சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் காரத்திற்கு பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்த

சிக்கன் பிரியாணி

Image
சிக்கன்  பிரியாணி     தேவையான பொருட்கள் 1/2 -கிலோ  கோழி கறி 2    - டம்ளர்  பாஸ்மதி அரிசி 3     - பெரிய வெங்காயம் 2    -  தக்காளி 2     - பச்சை மிளகாய் கையளவு  கொத்தமல்லி கையளவு  புதினா 1/2 ஸ்பூன்  மஞ்சள் தூள் 1 ஸ்பூன்  மிளகாய் தூள் தேவையானஅளவு  உப்பு 3 ஸ்பூன்  இஞ்சி பூண்டு விழுது 1/4 கப்  தயிர் 1  பட்டை 2  கிராம்பு 1  பிரியாணி இலை 1 ஸ்பூன்  சோம்பு 3 டம்ளர்  தண்ணீர் 3 மேசைக்கரண்டி  எண்ணெய் 1 மேசைக்கரண்டி  நெய் சமைக்கும் முறை  ஸ்டெப் 1           கோழி கறியை  மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கழுவி  வைக்கவும் . பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.                          ஸ்டெப் 2         பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு புதினா,கொத்தமல்ல